அஸ்மின்தான் தொடக்கிவைக்க வேண்டும்- பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர்

டிசம்பர் 5-இல் கூடவுள்ள பிகேஆர் இளைஞர் காங்கிரஸைக் கட்சித் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலிதான் தொடக்கி வைக்க வேண்டும் என்று இளைஞர் துணைத் தலைவர் ஹில்மான் இதாம் வலியுறுத்தியுள்ளார். அதுதான் வழக்கமாகும்.

“கட்சியின் வழக்கப்படி துணைத் தலைவர்தான் (பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைக்க வேண்டும்”, என்று ஹில்மான் கூறினார்.

அஸ்மின் பிகேஆர் இளைஞர் காங்கிரஸைத் தொடக்கி வைப்பதற்கு தேசிய அளவிலும் தொகுதிகள் அளவிலும் இளைஞர் அணி ஆதரவு திரட்டும் என்றும் நேற்றிரவு இளைஞர் அணி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் 196 இளைஞர் தொகுதித் தலைவர்களில் 132 பேர் கலந்து கொண்டார்கள்.

டிசம்பர் 5-இல் நடைபெறவுள்ள பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தை டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தொடக்கி வைப்பார் என்று தெரிகிறது. அக்கூட்டத்துக்கு அஸ்மினுக்கு அழைப்பு இல்லை.