அமனாவில் தலைவர்களைக் கவிழ்க்கும் முயற்சி இல்லை- சலாஹுடின்

பல மாநிலங்களிலும் அமனா கட்சித் தேர்தல் சுமூகமாக நடந்து வருகிறது. பெரிய பிரச்னைகள் இல்லை, தலைவர்களைக் கவிழ்க்கும் முயற்சியும் இல்லை என அதன் துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார்.

“கட்சித் தேர்தல் அமைதியாகவும் இணக்கமான முறையிலும் நடந்து வருகிறது. தலைவர்களைக் கவிழ்க்கும் முயற்சி எல்லாம் கிடையாது. இன்று பேராக்கிலும் பினாங்கிலும் தேர்தல். ஜோகூர், கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகியவற்றில் முடிந்து விட்டது. எல்லாம் நல்லவிதமாக நடந்து முடிந்தது”, என்றாரவர்.