ஊடக மன்றம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சரவை மலேசிய ஊடக மன்றம் அமைக்க கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் எட்டின் ஷியாஸ்லீ ஷித் கூறினார்.

மன்றம் பற்றி விவாதிக்க தன்னுடைய தலைமையில் அடுத்த வாரம் ஒரு கூட்டம் நடைபெறும் என்றும் ஊடகப் பேராளர்கள் எண்மர் அதில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“அமைச்சரவை எம்எம்சி-யை அமைக்கக் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான முதலாவது கூட்டம் மன்றத்தின் கட்டமைப்புப் பற்றி விவாதிக்கும்”, என்றார்.

ஊடக நடத்துநர்களின் நலனைப் பாதுகாக்கவே எம்எம்சி அமைக்கப்படுவதாக அந்த கோலா பிலா எம்பி கூறினார்.