மீடியா பிரைமா ஆள்குறைப்பு நடவடிக்கை: என்எஸ்டிபி-இல் 500பேர் வேலைநீக்கம் செய்யப்படுவர்

ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஊடகக் குழுமமான மீடியா பிரைமா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதன் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் (என்எஸ்டிபி)-இலிருந்து 543 பணியாளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆள்குறைப்புத் திட்டத்தால் த நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான், ஹரியான் மெட்ரோ ஆகிய மூன்றுமே பாதிக்கப்படும் என தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் என் எஸ்டிபி கிளை(என்யுஜே- என்எஸ்டி)பித் தலைவர் ஃபாரா மர்ஷிடா மலேசியாகினியிடம் கூறினார்.

அவர், வேலைநீக்க நடவடிக்கைகள் சீராக நடைபெறும் என்றும் இழப்பீடுகள் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறார்.

“இதுவே கடைசி ஆள்குறைப்பாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இந்நிலை ஏற்படக் கூடாது”, என்றும் அவர் வலியுறுத்தினார்.