கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 479 -ஆக உயர்ந்தது

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 65 அதிகரித்து, மொத்தம் 479-ஆக உயர்ந்துள்ளது என்று சீன அரசு தொலைக்காட்சி புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிப்பின் மையமான ஹூபேயில் மேலும் 3,156 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

வைரஸ் தோன்றியதாக நம்பப்படும் ஹூபேயின் மாகாண தலைநகர் வுஹான், செவ்வாயன்று 49 புதிய இறப்புகளைப் பதிவுசெய்தது. வுஹானில் மொத்தம் 362 பேர் இப்போது வைரஸால் இறந்துள்ளனர்.

வுஹானில் புதிய உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் செவ்வாயன்று 1,967 அதிகரித்துள்ளன, இது திங்களன்று 1,242ஆக இருந்தது.

  • ராய்ட்டர்ஸ்