“வாய் திறந்து பேசுங்கள்” – லிம் கிட் சியாங்

“வாய் திறந்து பேசுங்கள்” – லிம் கிட் சியாங்

இஸ்கண்டார் புத்ரி டி.ஏ.பி. கட்சியின் எம்.பி. லிம் கிட் சியாங் , முன்னால் அரசாங்கத்தில் உயர் மட்டத்தில் உள்ள பாரிசான் தலைவர்களை வாய் திறந்து பேசுமாறு கேட்டுள்ளார். முன்னால் ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், காணாமல் போன MH370 விமானம் குறித்த கருத்துக்கு அவர்கள் பதிலளிக்குமாறு லிம் கேட்டுள்ளார். அபோட் முன்னதாக முன்னால் அரசாங்கத்தில் உள்ள உயர் மட்ட தலைவர்கள், MH370 சம்பவம் பைலட்டின் வெகுஜன கொலை மற்றும் தற்கொலை செயல் என்பதை அவரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மலேசியா மற்றும் ஆஸ்திரேலிய என இரு தரப்பினருக்கும் இது ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கக்கூடும். MH370 சம்பவம், பைலட்டின் வெகுஜன கொலை மற்றும் தற்கொலை செயல் என்று முன்னால் அரசாங்கத்தில் உள்ள உயர் மட்ட தலைவர்கள் நம்பியதாக அபோட் தெரிவித்தார், என்று லிம் குறிப்பிட்டார்.

இன்று இரவும் நாளையும் ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படவுள்ள “எம்.எச்.370: தி அன்டோல்ட் ஸ்டோரி”/”MH370: The Untold Story” என்ற ஆவணப்படத்திற்காக உலகமே காத்திருக்கிறது என்று லிம் கூறினார்.

அபோட்டின் இந்த கூற்றை அடுத்து, MH370 மாயமான சம்பவத்தை ஆராயக் கோரி உலக ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் லிம்.