கெடாவும் கவிழ்ந்ததா? இன்று பிற்பகல் ‘சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு’

முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான மாநில அரசின் நிலைப்பாட்டை பாதிக்கும் ஒரு அறிவிப்பை இரண்டு கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் இன்று “சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு” அழைப்பு விடுத்துள்ளர்.

இது மாநில அரசாங்கத்தில் அவர்களின் “நிலைப்பாடு” பற்றியது என்று லிங்கின் அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இதற்கிடையில், கெடா தேசிய கூட்டணி (பி.என்) இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கும் “சிறப்பு ஊடக மாநாட்டிற்கு” அழைப்பு விடுத்ய்ஹ¤ள்ளது. இந்த நிகழ்வு கெடா பாஸ் வளாகத்தில் நடைபெறுகிறது.

கடந்த வாரம், கெடா பாஸ் ஆணையர் அகமட் யஹாயா, கெடா மாநில அரசாங்கத்தின் மாற்றம் “தவிர்க்க முடியாதது” என்றும், கெடாவில் பாக்காத்தான் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் கூறினார்.