நான் இன்னும் கெடாவின் மந்திரி புசார் – முக்ரிஸ்

மாநில சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறினாலும், தான் இன்னும் கெடா மந்திரி புசாராக இருப்பதாக முக்ரிஸ் மகாதீர் தன் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

“கெடாவில் அரசியல் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, நான் இன்னும் மந்திரி புசாராக தான் இருக்கிறேன், அரசாங்கம் இன்னும் நடைமுறையில் தான் உள்ளது, எனவே இந்த அரசாங்கம் நேற்று வீழ்ந்தது என்று எந்தவொரு தரப்பினரும் கூறுவது உண்மையல்ல” என்று அவர் கூறினார்.

“இதுபோன்ற ஒரு காரியம் நடக்குமுன் கெடா சுல்தானின் கீழ் உள்ள பிற செயல்முறைகளும் செயல்படுத்தப்பட வேண்டும்.”

“எனவே இது நடப்பதற்கு முன்பு, அரசாங்கம் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது, அதனால்தான் இன்று ஒரு எக்ஸ்கோ கூட்டமும் நடத்தப்பட முடிகிறது” என்று அவர் இன்று கெடாவின் விஸ்மா டாருல் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இன்று நடந்த எக்ஸ்கோ கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது முக்ரிஸ் இதனை தெரிவித்தார்.