கோவிட் 19 : 1,240 புதியத் தொற்றுகள், 7 மரணங்கள் பதிவு

இன்று 1,240 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் 4 இலக்க எண்ணிக்கையை நாடு கண்டுள்ளது.

அவசரப் பிரிவில் 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 31 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையே, இன்று 691 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

இன்று 7 மரணங்கள் சம்பவித்துள்ளன, அனைத்தும் சபா மாநிலத்தில் பதிவாகியுள்ளன. ஆக, இதுவரை நாட்டில் 236 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

மேலும் இன்று, சபா, நெகிரி செம்பிலான் மற்றும் பேராக்கில் 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மாநிலம் வாரியாக, புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சபாவில் 927, சிலாங்கூரில் 177, பினாங்கில் 61, நெகிரி செம்பிலானில் 25, கோலாலம்பூரில் 17, பேராக்கில் 8, சரவாக்கில் 7, லாபுவானில் 5, ஜொகூரில் 4, கெடா, திரெங்கானுவில் 3, மலாக்காவில் 2.