கோவிட் 19 : இன்று 3,339 புதிய நேர்வுகள், 7 மரணங்கள்

நாட்டில் இன்று, 3,339 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 7 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

2,676 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 93 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கூட்டரசுப் பிரதேசம் மற்றும் மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,314), சபா (393), ஜொகூர் (362), கோலாலம்பூர் (334), நெகிரி செம்பிலான் (236), பினாங்கு (120), கிளந்தான் (114), பேராக் (107), கெடா (96), சரவாக் (62), பஹாங் (61), மலாக்கா (60), புத்ராஜெயா (23), திரெங்கானு & லாபுவான் (22), பெர்லிஸ் (13).

மேலும் இன்று 10 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.