இன்று 4,140 புதிய நேர்வுகள், 44 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 4,140 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 14 நாட்களுக்கு முந்தைய (352) சராசரி எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான புதிய வழக்குகளைக் கிளந்தான் (190) பதிவுசெய்தது.

இதற்கிடையில், இன்று 44 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டில் பதிவான ஆக அதிக மரண எண்ணிக்கையாகும். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,866 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 3,432 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 272 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,507, ஜொகூர் (433), கோலாலம்பூர் (398), பினாங்கு (338), சரவாக் (324), கெடா (239), நெகிரி செம்பிலான் (190), பேராக் (182), திரெங்கானு (119), பஹாங் (116), கிளந்தான் (109), மலாக்கா (97), சபா (60), புத்ராஜெயா (23), லாபுவான் (3), பெர்லிஸ் (2).

மேலும் இன்று, 15 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.