இன்று 7,452 புதிய நேர்வுகள், 109 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,452 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 109 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,291 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 6,105 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 446 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,509), நெகிரி செம்பிலான் (843), கோலாலம்பூர் (678), சரவாக் (651), ஜொகூர் (412), பினாங்கு (370), கிளந்தான் (312), பஹாங் (286), கெடா (263), சபா (259), பேராக் (252), மலாக்கா (206), லாபுவான் (205), திரெங்கானு (190), புத்ராஜெயா (12), பெர்லிஸ் (4).

மேலும் இன்று, 24 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.