இன்று 6,241 புதிய நேர்வுகள், 87 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,241 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இன்று, 87 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,378 பேர் பலியாகியுள்ளனர்.

சிலாங்கூர் (34) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது, ஜொகூர் (12), நெகிரி செம்பிலான் (9), கெடா (6), கோலாலம்பூர் (5), பினாங்கு (4), சரவாக் (4), கிளந்தான் (3), பஹாங் (3), திரெங்கானு (3), மலாக்கா (2) மற்றும் லாபுவான் (2) எனப் பதிவாகியுள்ளன.

இன்று 5,133 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 444 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,178), சரவாக் (600), ஜொகூர் (565), நெகிரி செம்பிலான் (556), கோலாலம்பூர் (415), சபா (305), பினாங்கு (271), கிளந்தான் (270), மலாக்கா (225), லாபுவான் (212), பேராக் (174), திரெங்கானு (158), பஹாங் (155), கெடா (125), புத்ராஜெயா (30), பெர்லிஸ் (2).

மேலும் இன்று, 2,338 திரளைகளில் மொத்தம் 713 இன்னும் செயலில் உள்ளன. இன்று அறிவிக்கப்பட்ட 30 புதியத் திரளைகளும் அதில் அடங்கும்.