17,786 புதிய நேர்வுகள், 165 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,786 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 165 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,024-ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 11,718 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,062 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 534 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (6400), கோலாலம்பூர் (1962), கெடா (1389), ஜொகூர் (1144), சபா (1035), நெகிரி செம்பிலான் (929), திரெங்கானு (883), பேராக் (775), பினாங்கு (713), மலாக்கா (697), பகாங் (653), கிளந்தான் (580), சரவாக் (485), புத்ராஜெயா (116), பெர்லிஸ் (16), லாபுவான் (9).

மேலும் இன்று, 28 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 13 பணியிடத் திரளைகள் ஆகும்.