சேமநிதி பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் – அம்னோ இளைஞர் தலைவர்

கோவிட்-19 தொற்றுநோயால் மக்கள் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், சேமநிதி வைப்பு நிதியை (EPF) திரும்பப் பெறுவது அவசரத் தேவையாக கருதப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி (Asyraf Wajdi Dusuki) கூறினார்.

இது மக்களின் உயிர்வாழ்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார், இக்கட்டான சூழலில்  அவர்களின் வாழ்க்கை மாற்றம் காணும் என்பதற்கு தற்போது எந்த உத்தரவாதமும் இல்லை.

“கோவிட்-19 தொடங்கியதில் இருந்து பல்வேறு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் (எம்சிஓ) அமல்படுத்தப்பட்டது வரை, மக்கள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் சமீபத்தில், ஓய்வுக்குப் பின் வாழ்க்கைக்கு பங்களிப்பாளர்களின் சேமிப்பைப் பாதுகாக்க, மேலும் சேமநிதி ஐ-சித்ரா(EPF i-Citra) திரும்பப் பெறுவதற்கு அரசு ஒப்புதல் அளிக்காது என்று கூறியுள்ளார்.