‘நெறியற்ற’ அறிக்கைகள் – ஊடகங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுார் மூசா(Annuar Musa) ஊடகங்களுக்கு ஒரு எச்சரிக்கை யை விடுத்துள்ளார். பத்திரிகை நெறிமுறைகள்  நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

“ஊடக சுதந்திரக் கொள்கையை அரசாங்கம் மதித்தாலும், செய்திகளை வெளியிடுவதில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

“ஒருவரின் உரிமைகள் அல்லது சட்டத்தை மீறும் அறிக்கைகளை வெளியிடக் கூடாது. மேலும் அது ஊடகங்கள் தண்டனைச் சட்டத்தின் கீழ் சிவில் நடவடிக்கை அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வழிவகுக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்” என்றார்.

எதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று அன்னுார் தெரிவிக்கவில்லை.

எவ்வாறாயினும், ஊடகங்கள், சட்டம் மற்றும் ஊடக நெறிமுறைகளை மீறுவதாக பல்வேறு தரப்பிலிருந்து தனது அமைச்சகத்திற்கு நிறைய புகார்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.

திங்களன்று, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் அலுவலகம் மூன்று இணையதளங்களுக்கு எதிராக போலீஸில் புகாரை பதிவு செய்தது.

இஸ்மாயில் சப்ரி பெரிகத்தான் நேஷனல் தனக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற வேண்டாம் என்று “கெஞ்சியது” – என்று இணையதளங்கள் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.

இஸ்மாயில் சப்ரியின் அலுவலகம் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யான செய்தி என்று கூறியது.

அம்னோ தலைமையிலான அரசாங்கத்திற்கு PN இன் ஆதரவு நிபந்தனைக்கு உட்பட்டது என்று பெர்சத்து மற்றும் PAS எச்சரித்த பின்னர் இந்த அறிக்கைகள் வெளிவந்தன.

ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு அம்னோ- BN மற்றும் PN இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன, இது விரைவான தேர்தலுக்கு வழி வகுத்தது.