ஜொகூரில் மூடாவின் அறிமுகம் – மக்களிடையே அதிருப்தி

ஜொகூரில் நான்கு தொகுதிகளை  மூடாவுக்கு வழிவகுத்த அமனாவின் நடவடிக்கை, முன்னாள் அடிமட்ட மக்களிடையே அதிருப்தியை தூண்டியுள்ளது என்று அமானாவின் இளைஞர் தலைவர் ஒருவர் (கடாபி) கூறினார்.

தெனாங், புக்கிட் கெப்போங், பாரிட் ராஜா, புத்ரி வாங்சா  ஆகிய நான்கு இடங்களை மூடாவுக்கு வழங்கியதன் மூலம் அமானா மிகவும் தியாகம் செய்தது என்று அவர் குறிப்பிட்டார்.

“அவர்களில் இருவர் ஏற்கனவே ஜொகூர் அமானாவில் முக்கிய நபர்களாக உள்ளனர் – அவர்கள் இந்த வெல்லக்கூடிய இடங்களை ஒப்படைக்கும் தலைமையின் நடவடிக்கை குறித்து உள் அழுத்தம் மற்றும் சர்ச்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.

ஹராப்பான் கூட்டு கட்சியான டிஏபி, மச்சாப் மற்றும் புக்கிட் பெர்மாய் ஆகிய இரண்டு இடங்களில் இந்த இளைஞர்கள் சார்ந்த கட்சிக்கு வழி செய்கிறது .

மூடா ஹராப்பானின் கூட்டு கட்சியாக இல்லாத நிலையில்லும், ​​ஹராப்பான் சின்னத்தில் போட்டியிடாத நிலையிலும், இந்த வாய்ப்புகளை தியாகம் செய்வது மதிப்புள்ளதா என்று கடாபி கேள்வி எழுப்பினார்.

மூடா ஆன்லைனில் பிரபலமாக இருக்கலாம், ஆனால் தேர்தல் ரீதியாக சோதிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூடா, ஹரப்பான் அணியில் இருப்பது போல் பார்க்க மூடா தயாராக இல்லை.

அவர்கள் ஒன்றிணைந்த எதிர்கட்சி என்ற யோசனையை மட்டுமே பரப்புகிறார்கள். இந்த யோசனை மூடாவுக்கு மட்டுமே நன்மை பயக்கும் மற்றும் ஹராப்பானுக்கு தீங்கு விளைவிக்கும்.

“ஏனென்றால் மூடா வரவேற்கப்படாவிட்டால், மூடா நமது வாக்குப் பங்கை மட்டுமே முழுங்கிவிடும். இது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார்  கடாபி.

PKR மற்றும் Muda தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

ஜொகூரில் மார்ச் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் நாள் பிப்ரவரி 26ஆம் தேதியாகும்.