கோவிட் – நேர்மறை தொடர்பு ஊழியர்களை அமர்த்துவோருக்கு எச்சரிக்கை

மலாக்காவில் உள்ள அனைத்து முதலாளிகளும் கோவிட்-19 நேர்வுகளின் நெருங்கிய தொடர்புகளாக இருக்கும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு  எதிராக எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுவின் தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலேஹ் கூறுகையில், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் உற்பத்தித் துறை போன்ற வளாகங்களின் முதலாளிகள், தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக, பல புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

‘’இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்த பணியாளரும் இது சார்பாக புகாரளிக்க வலியுறுத்துகிறோம்’’.

“நெருக்கமான தொடர்பு என்ன என்பதை முதலாளிகள் தெரிந்து கொள்ள வேண்டும், இதனால் பணியிடத்தில் பரவும் பரவலை பிறருக்கு பரவாமல் தடுக்க முடியும்”, என்று நேற்று அவர் ஜாசினில் உள்ள மெர்லிமாவ் தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முஹமட் கூறுகையில், மாநிலத்தில் பணியிடங்களில் திரளலையின் பாதிப்பு சமீபத்தில் அதிகரித்துள்ளதாகவும், பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த மூன்று நாட்களில் பணியிடத்தில் நெருங்கிய தொடர்புகளின் எண்ணிக்கை 4.8 சதவீதத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.

சோதனையின் போது, மாநில சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை உடனடியாக ஏழு நாள் மூடலுக்கு உத்தரவிட்டது, இன்று தொடங்கி, தொழிற்சாலையில் நோயாளிகள் கடுமையாக அதிகரித்தபின்னர், தொற்று வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருப்பதைக் கண்டறிந்தது.

பிப்ரவரி 5 முதல், தொழிற்சாலையில் மொத்தம் 21 தொழிலாளர்கள் (ஆர்டி-பிசிஆர்) சோதனை மூலம் நேர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது.

‘’மாநில சுகாதாரத்துறை தன்னிச்சையாக தொழிற்சாலையை மூட உத்தரவு பிறப்பிப்பதில்லை; பணியிடத்தில் உள்ள மதிப்பீட்டின் அடிப்படையில் இது செயல்படுகிறது, கட்டுப்படுத்த முடியாமல் மற்ற பகுதிகளுக்கு பரவினால்,  தொழிற்சாலையை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்”, என்று அவர் கூறினார்.