கோவிட்-19 (பிப். 15): 22,133 புதிய நேர்வுகள்

நாட்டில் புதிய கோவிட்-19 நேர்வுகள் இன்று 22,133 ஆக உயர்ந்துள்ளன, இது ஆண்டின் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையான 22,000 அளவைத் தாண்டியுள்ளது.

மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை  3,083,683 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த புதிய நேர்வுகளில் (99.34 சதவீதம்) 21,987 நேர்வுகள் ஒன்று மற்றும் இரண்டு வகைகளிலும், மேலும் (0.66 சதவீதம்) 146 நேர்வுகள் மூன்று, நான்கு மற்றும் ஐந்து வகைகளிலும் இருப்பதாக அவர் கூறினார்.

ஒன்று மற்றும் இரண்டு வகை – அறிகுறிகள் இல்லாத மற்றும் லேசான அறிகுறி உள்ள நோயாளிகளைக் குறிக்கின்றன, வகை மூன்று நுரையீரல் தொற்றுகளை உள்ளடக்கியது, வகை நான்கு நுரையீரல் தொற்றுகளை உள்ளடக்கியது மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, அதே நேரத்தில் வகை ஐந்து முக்கியமான, சேதமடைந்த உறுப்புகள் மற்றும் வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது.

21,315 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 14) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:

சபா (4,035)

சிலாங்கூர் (3,955)

ஜொகூர் (2,800)

கெடா (2,733)

பினாங்கு (1,656)

கிளந்தான் (1,330)

கோலாலம்பூர் (1,010)

பகாங் (938)

நெகிரி செம்பிலான் (7067)

மலாக்கா (666)  சரவாக் (206) லாபுவான் (189) பெர்லிஸ் (129) புத்ராஜெயா (124)