புகைபிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும்- கைரி

2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த தலைமுறையினர் புகைபிடிப்பதையும் புகையிலை பொருட்களை வைத்திருப்பதையும் தடைசெய்யும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

புகையிலை பயன்பாடு புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகவும், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் 22% பங்களிப்பதால், எதிர்கால சந்ததியினர் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க, இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்கிறார்.

நாடாளுமன்றம் சட்டத்தை நிறைவேற்றினால், இந்த நாட்டில் இனி ஒருபோதும் 17 வயதில் உள்ளவர் சிகரெட் வாங்க முடியாது,” என்று புற்றுநோய் தின கொண்டாட்டத்தை இன்று தொடங்கும் போது அவர் கூறினார்.

இதற்கிடையில், 2007 முதல் 2011 வரை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 103,507 இருந்து 2012 முதல் 2016 வரை 11 சதவீதம் அதிகரித்து 115,238 ஆக புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கைரி கூறினார்.

மேலும், 10 ஆண்களில் ஒருவருக்கும், 9 பெண்களில் ஒருவருக்கும் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, என்றார்.

மலேசியாவில் ஆண்களிடையே பொதுவாக உள்ளன. மூன்று வகையான புற்றுநோய்கள், பெருங்குடல் புற்றுநோய் (16.9%), நுரையீரல் புற்றுநோய் (14.8 சதவீதம்) மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் (8.1 சதவீதம்), பெண்களில், மார்பக புற்றுநோய் (33.9 சதவீதம்), பெருங்குடல் புற்றுநோய் (10.7 சதவீதம்) மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (6.2 சதவீதம்).

தனியார் மருத்துவமனைகளில் (34.95 சதவீதம்) பதிவுசெய்யப்பட்ட இறப்புகளுக்கு புற்றுநோயே முதன்மைக் காரணம் என்றும், அரசு மருத்துவமனைகளில் இறப்புக்கு நான்காவது காரணம் (11.56 சதவீதம்) என்றும் கைரி கூறினார்.

இந்த ஆண்டு மட்டும், கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் சேவைகளுக்கு அரசாங்கம் ரிம.137 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்றும், நோயறிதலை உறுதிப்படுத்தும் ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல், மறுவாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை சேவைகள் போன்ற பிற செலவுகள் இதில் அடங்காது என்று அவர் கூறினார்.

புற்று நோய் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட தேசியவரைவு திட்ட(2021-2025) புத்தகத்தை வெளியிட்டார்.