கோரமான சாலை விபத்தில் பலியான அந்த 5 மாணவர்களின் விபரங்கள்

புதன்கிழமை இரவு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து இறந்த போன மேலும் மூன்று பல்கலைக்கழக மாணவர்களின் அடையாளங்களை நிறுவ பல் பதிவுகள் காவல்துறைக்கு உதவியுள்ளது.

கோலா கங்சார் காவல்துறைத் தலைவர் உமர் பக்தியார் யாக்கோப் அந்த  மூன்று மாணவர்களின் விவரங்களை வெளியிட்டார். அவை:

சிலாங்கூர் கோலா குபு பாருவைச் சேர்ந்த கார் டிரைவர் முஹம்மது நஸ்ருன் ஐடோல் முனீர் அக்பர் 22,  மற்றும் பின்பக்க பயணிகள் சிலாங்கூர் பண்டார் பாரு  செலாயாங்கைச் சேர்ந்த முஹம்மது நபில் ஹைகல் முஹம்மது ஃபாரிஸ், 19, மற்றும் ஜோகூரில் உள்ள செனாய்யை  சேர்ந்த இக்பால் ஹஸ்னுன் ஹலிமி, 23.

“விரைவில் அடையாளம் காணும் செயல்முறை முடிந்ததும் எஞ்சியுள்ள உடல்களை  அவர்களின் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

நேற்று இரவு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மேலும் இரு மாணவர்களை அவர்களது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் பேராக் மாநிலம் பரிட் புந்தார் சேர்ந்த அகமது அக்மல் அகமது மொக்லிஸ், 20; மற்றும் கெமாமன், தெரெங்கானுவைச் சேர்ந்த அஹ்மத் நயிம் நஜ்மி அஹ்மத் ஹபிஸான், 21.

இந்த  ஐந்து மாணவர்களும் காரில் வடக்கு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு டிரெய்லர் டிரக் லாரிகளுடன் மோதி விபத்துக்குள்ளானர்கள்.