படாங் செராய் போட்டியிலிருந்து நான் வெளியேறவில்லை – சோஃபீ

படாங் செராய் போட்டியிலிருந்து நான் வெளியேறவில்லை என்று சோஃபீ BN எதிர் கட்சியரிடம் கூறுகிறார்

படாங் செராய் நாடாளுமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான முகமட் சோபி ரசாக், தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகப்போவதில்லை என்று கூறினார்.

இது என்னைப் பற்றியது அல்ல. படாங் செராய் கடந்த 15 ஆண்டுகளாக ஹராப்பானின் கோட்டையாக இருந்து வருகிறது.

“எனவே, படாங் செராய் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து ஹராப்பான் விலகுவது பற்றி எந்தக் கேள்வியும் இல்லை,” என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பானின் படாங் செராய் வேட்பாளர் முகமது சோபி ரசாக்

“போட்டியிலிருந்து இருந்து விலகி, இடைத்தேர்தலில் BN வெற்றி பெற தங்கள் ஆதரவை ஹராப்பனிடம் கேட்கும் சிவராஜின் கருத்தை நான் மதிக்கிறேன், ஆனால் அதற்குப் பதிலாக BN ஏன் போட்டியிலிருந்து வெளியேறக் கூடாது?” கூலிமில் இன்று நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுதீன் ஹருனுடன் தேர்தல் பிரச்சாரத்தின்போது சோஃபீ கேட்டார்”.

படாங் செராய் தேர்தல் டிச.7ம் தேதி நடக்கிறது.

இதற்கிடையில், புத்ராஜெயாவின் ஒற்றுமை அரசாங்கத்தை ஒரு “முறைகேடானது” என்று விவரித்ததற்காக மாமன்னரிடம் மன்னிப்பு கேட்குமாறு சோபி தனது பெரிகாத்தான் நேசனல் (PN) எதிரிப்பாளரான அஸ்மான் நஸ்ருதீனை வலியுறுத்தினார்.

“GE15க்குப் பிறகு எந்தக் கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாததால் மன்னர் இந்தத் தீர்வைக் கொண்டு வந்தார்”.

“அவ்வாறு, ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராகிமை ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க மன்னர் அழைத்தார், இவர் மலேசியாவின் 10வது பிரதமராக நியமிக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.