வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிலையான உணவு விநியோகம் வழங்கப்படும் – அமைச்சர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிலையான உணவு விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உணவு விநியோகம் சீராக இருப்பதாக உள்நாட்டு வர்த்தகம் துறை அமைச்சர் சலாவுதீன் அயூப்(Salahuddin Ayub) உறுதியளித்துள்ளார்.

எவ்வாறாயினும், மாநிலங்களில் காய்கறிகளின் விலை உயர்வுகுறித்து அமைச்சகத்திற்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

“பொருட்கள் பதுக்கல் அல்லது லாபம் ஈட்டாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அமலாக்க அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். வானிலை காரணமாக, குறிப்பாகக் கிழக்குக் கடற்கரை மாநிலங்களில், விநியோகப் பற்றாக்குறை ஏற்படுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் செய்தியாளரிடம் கூறினார்.

இன்று முதல், அமைச்சகம் தனது உணவு வங்கி திட்டத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும், இது சமைத்த உணவை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்று சலாஹுதீன் மேலும் கூறினார்.

இதற்கிடையில், சில பகுதிகளில் பொருட்களின் விநியோகம் குறித்து அமைச்சகத்திற்கு புகார்கள் வந்துள்ளதாகவும், நிலைமையைக் கண்காணிக்க அமலாக்க அதிகாரிகள் அணிதிரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.