பல்கலைக்கழகங்களில் பெண்களைத் தடை செய்த தாலிபானுக்கு, DAP, PKR கண்டனம்

DAP மற்றும் PKR பெண்கள்,  ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர தடை விதித்த தலிபான் அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

PKR மகளிர் தலைவி ஃபாட்லினா சைடெக்(Fadhlina Sidek) இன்று வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர்துறையில் பாலின இடைவெளியை நீண்ட காலத்திற்கு விரிவுபடுத்தக்கூடிய பிற்போக்குத்தனமான முடிவை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்கலைக்கழக அளவில் தங்கள் படிப்பைத் தொடர தலிபான் அரசாங்கம் தடை விதித்ததற்கு நான் ஆழ்ந்த வருத்தப்படுகிறேன், மேலும் பிற்போக்குத்தனமான முறையை ஊக்குவிக்கும் கொள்கையை கண்டிக்கிறேன்”.

“இந்தக் கட்டுப்பாடு தரமான வேலை வாய்ப்புகள், பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியில் பாலின இடைவெளியை விரிவுபடுத்தும்,” என்று அவர் கூறினார்.

“இந்த பிற்போக்குத்தனமான மற்றும் பாரபட்சமான கல்விக் கொள்கை நீண்ட கால விளைவுகளையும், இஸ்லாமிய அடிப்படையிலான நிர்வாகத்தின் அடித்தளத்தை மோசமாக பாதிக்கும்,” என்று ஃபத்லினா மேலும் கூறினார்.

உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களை ஈடுபடுத்தாதது இறுதியில் பெண்களின் பங்கேற்பைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

“எனவே, தாலிபன் அரசாங்கம் அத்தகைய கட்டுப்பாட்டை திரும்பப் பெறவும், பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்விக்கான அணுகலை மீட்டெடுக்கவும் பரிசீலிக்க வேண்டும்,” என்று ஃபத்லினா கூறினார்.

இதற்கிடையில், DAP தலைவர் லிம் குவான் எங் தாலிபன்களின் பாலின பாகுபாடு நடத்தையை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.

DAP தலைவர் லிம் குவான் எங்

“ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசாங்கத்தின் இந்தப் பெண் விரோதக் கொள்கையை DAP கண்டிக்கிறது, மேலும் தாலிபன்களை போற்றுவதாகக் கூறுபவர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் உலகெங்கிலும் உள்ள பெண்களுடன் ஒன்றிணைந்து பல்கலைக்கழகங்களில் இருந்து பெண்கள் மீதான இந்தப் பழமையான தடையைத் திரும்பப் பெற வலியுறுத்த முடியும் என்று நம்புகிறது”.

“பாலினப் பாகுபாட்டை நிறுத்துங்கள்,” என்று லிம் ஒரு அறிக்கையில் கூறினார்.

டிசம்பர் 20 அன்று, தாலிபன் அரசாங்கம் மறு அறிவிப்பு வரும் வரை பெண் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அணுகலை இடைநிறுத்தியதற்காக உலகளாவிய விமர்சனத்தை எதிர்கொண்டது.

பல பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் இறுதிப் பரீட்சைக்கு அமர்ந்திருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில், அனைத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளும் திறக்கப்படும் என்பதற்கான சமிக்ஞைகளை திரும்பப் பெற்றதற்காகதாலிபன் பல வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் சில ஆப்கானியர்களிடமிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டனர்.