தொடக்கத்திலிருந்தே அம்னோ உட்பூசலால் உலைவைக்கப்பட்டது – ஜாஹிட்

யாங் டி-பெர்துவான் அகோங்கின் ஆலோசனையின் மூலம் கூட்டணி ஆட்சி அமைக்கும் போது அம்னோ கட்சி தனது சொந்த அங்கத்தினர்களால்  துரோகம் இழைக்கப்பட்டது என்பதை, அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று வெளிப்படுத்தினார்.

இந்த முடிவிற்கு முன், அம்னோ மற்ற இரண்டு கூட்டணிகளான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) ஆகியவற்றுடன் பல நிபந்தனைகளின் கீழ் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜாஹிட் கூறினார்.

ஹராப்பான், அம்னோவின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வமாக பதிலை அளித்தது.

அதே நேரத்தில், பாகான் டத்தோ எம்.பி மேலும் கூறுகையில், எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அகோங்கின் முன்மொழிவை நிராகரிக்கும் முடிவை பி.என் எடுத்தது என்றார்.

ஜாஹிட்டின்படி, பத்து சத்திய பிரமான ஆதரவு (SD), அம்னோ எம்.பி.க்களிடமிருந்து வந்தவை, அவை கட்சியைக் குறிப்பிடாமல் முஹிடினிடம்  கொடுக்கப்பட்டன.

“ஆரம்பத்திலிருந்தே, கட்சி ஏற்கனவே காட்டிக் கொடுக்கப்பட்டது. இது எங்கள் சொந்த மாட்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது இன்னும் வருத்தமளிக்கிறது,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் அம்னோ தலைவர் உரையை ஆற்றியபோது கூறினார்.

இருப்பினும், PN ஐ ஆதரிக்கும் இயக்கத்தின் மூளையாக இருந்தவர் யார் என்பதை அவர் தெளிவாகக் கூறவில்லை.

அம்னோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.அது, நேற்றைய தினம் நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் பிரிவின் பிரதிநிதிகள் விடுத்த அழைப்பின்படியே இது அமைந்துள்ளது.

“காத்திருங்கள்… கடவுள் விரும்பினால், விரைவில்,” என்று அவர் பிரதிநிதிகளின் கைதட்டலுக்கு இடையே கூறினார்.

முன்பு PNக்கு ஆதரவளித்த 10 எம்.பி.க்கள் இப்போது மீண்டும் அம்னோ/பிஎன் இடம் வந்துள்ளனர் என்றும் ஜாஹிட் வலியுறுத்தினார்.

“அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள், நான் அவர்களை மன்னித்துவிட்டேன், ஆனால் அதை மறப்பது கடினமாக இருக்கும்.” என்றார்.