குவாந்தான், ரோம்பினுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பகாங் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, குவாந்தான் மற்றும் ரோம்பின் மாவட்டங்களுக்கு (The Department of Irrigation and Drainage) வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவாந்தானில், பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் கம்போங் பத்து 6, கம்போங் சுங்கை காரு, கம்போங் பஞ்சிங், கம்போங் பாசிர் கெமுடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

இதற்கிடையில், ரோம்பினில், கம்போங் பெர்விரா ஜெயா, ஃபெல்டா செலாங்கர் மற்றும் ரோம்பின் ஆற்று வடிநிலம் சம்பந்தப்பட்ட சுற்றியுள்ள பகுதிகள் ஆபத்தில் உள்ளன.

இன்று (பிப்.,6) மதியம் 12:30 மணிக்கு இப்பகுதிகளை வெள்ளம் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னறிவிப்பை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படலாம்வ்” என்று டிஐடி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் குடியிருப்போர் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகள் அல்லது வெள்ளப் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் அதன் இணையதளமான Facebook @PublicInfoBanjir மற்றும் Twitter @JPS_InfoBanjir ஐப் பார்வையிடலாம்.

இதற்கிடையில், குவாந்தனில் உள்ள சுங்கை லெம்பிங், புக்கிட் கெனாவில் உள்ள சுங்கை குவாந்தன் மற்றும் ஸ்ரீ டாமாயில் உள்ள சுங்கை பெலாட் ஆகிய மூன்று நதிகளின் அளவீடுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டதாக இணையதளம் தெரிவித்துள்ளது.

குவாந்தான் பொதுப்பணித் துறையின் (PWD) முகநூல் பக்கம், ஜலான் கோலாலம்பூர்-குவாந்தான், காம்பாங்கில் உள்ள சிம்பாங் சென்டோரியாவுக்கு அருகில், இன்று நண்பகல் நிலவரப்படி, வெள்ளம் காரணமாக இலகுரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.