அசாம்: MACC லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டிய நபருக்கு மன்னிப்பு இல்லை

முன்னாள் பெர்சத்து தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜானுக்கு(Wan Saiful Wan Jan) ஆணையம் 10 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டிய நபரை MACC மன்னிக்காது.

இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாகி, அந்த நபர் நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவித்துள்ளதாகவும், வெறுமனே மன்னிப்பு கேட்டு விடுவிக்க முடியாது என்றும் கூறினார்.

முகநூலில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், அவரை மன்னிக்க முடியாது. கடினமான மன்னிக்க முடியாத குற்றச்சாட்டுகளால் அவர் எம்ஏசிசியின் நற்பெயரை சேதப்படுத்தியுள்ளார்.

“அவர் எம்ஏசிசிக்கு எதிராக ஊகங்களை உருவாக்கியுள்ளார், சேதம் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. அதை உண்மை என்று மக்கள் நம்புகிறார்கள்,” என்றார்.

வான் சைபுலின் முன்னாள் ஆராய்ச்சியாளர் என்று கூறிக்கொள்ளும் முகமட் ஷபிக் அப்துல் ஹலீம்(Mohamad Shafiq Abdul Halim), செவ்வாயன்று பெர்சத்து தலைவர்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னர் டிக்டாக் வீடியோவில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அசாமின் கூற்றுப்படி, ஷபிக் நேற்று எம்ஏசிசி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்குக் கைது செய்யப்பட்டார்.

எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 48 இன் கீழ் “விசாரணை மற்றும் தேடலுக்கு இடையூறு விளைவித்ததற்காக,” அவர் விசாரிக்கப்பட்டார்.

செவ்வாயன்று, ஜனா விபாவா திட்டத்தின் ஒரு பகுதியாக 232 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சாலைத் திட்டத்தைப் பெற Nepturis Sdn Bhd-க்கு உதவ குறிப்பிடப்படாத லஞ்சம் கோரியதற்காகவும், அதே நிறுவனத்திடமிருந்து 6.96 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகவும் இரண்டாவது குற்றச்சாட்டையும் அவர் குற்றம் சாட்டினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், வான் சைபுலுக்கு 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், தூண்டுதலின் மதிப்பைவிட ஐந்து மடங்குக்குக் குறையாமல் அபராதமும் விதிக்கப்படலாம்.