ஒற்றுமை அரசாங்கத்திற்காக முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன ?

மலாக்கா மாநிலத்தில் ஒற்றுமை ஆட்சி அமைக்க புதிய முதல்வர் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்று அம்னோ இளைஞர் அமைப்பின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வியாழன் வரை முதலமைச்சராக இருந்த சுலைமான் அலியை, ஒற்றுமைக் கூட்டணியை அமைக்க அம்னோ அறிவுறுத்தியிருக்க முடியும் என்று அவரை கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கூட்டாட்சிக் கூட்டணி அமைப்பதற்கு ஏற்ப, ஒரு ஐக்கிய அரசாங்கம் அமைப்பது குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

அவர் விரும்பியது அதுவாக இருந்தால், முதலமைச்சரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று ஷாரில் ஹம்தானுடன் தனது கெலுார் செகேஜாப் (சிறிது நேரம் வெளியே) என்ற தனது நிகழ்ச்சியில் கைரி கூறினார்.

மலக்காவின் முதல்வர் மாற்றத்திற்கு ஜாஹிட் தனது ஆசீர்வாதத்தை வழங்குவதன் மூலம் ஒரு பெரிய சலுகை செய்கிறார் என்று கைரி கூறினார், அதில் சுலைமானுக்கு பதிலாக மலக்கா அம்னோ தலைவர் அப் ரவூப் யூசோ நியமிக்கப்பட்டார்.

 

 

-fmt