2019 முதல் 990 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் தொடர்பான சொத்துக்கள் பறிமுதல்

2019 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான 990 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை மலேசியா வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளதாக உள்துறை அமைச்சர் சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எங்கள் சட்ட அமலாக்க முகவர்கள் மொத்தம் 98 ரகசிய ஆய்வகங்களை விடாமுயற்சியுடன் அகற்றி, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 351 பேரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும்,” என அவர் நேற்று வியன்னாவில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் ஆணையத்தின் 67 வது அமர்வின் உயர்மட்ட பிரிவில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த 2020 முதல் கடந்த ஆண்டு வரை 16,865 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிகள் வழங்கப்பட்டது.

சர்வதேச மற்றும் அதன் பகுதிகளிலுள்ள உடன்படிக்கைகள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மூலோபாயத் திட்டம் 2021-2025 ஆகியவற்றுக்கான அதன் கடமைகளுக்கு இணங்க, உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனையை எதிர்கொள்வதில் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியா உறுதியளித்துள்ளது.

மலேசியா சட்டவிரோதமான போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை சீர்குலைக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கூட்டுறவை தொடர்ந்து வலுப்படுத்தும், என்று அவர் கூறினார்.

 

 

-fmt