Padu பதிவு நிறுத்தப்பட்டது: சரவாக் ஆதரிக்கிறது, ஆனால் எச்சரிக்கையுடன் செயல்படுத்த விரும்புகிறது

மத்திய தரவுத்தள மையத்தை (Padu) அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நோக்கத்தைச் சரவாக் அரசாங்கம் ஆதரிக்கிறது, ஆனால் திட்டத்தை எச்சரிக்கையுடன் செயல்படுத்துமாறு அறிவுறுத்தியது.

சரவாக் பிரதமர் துறையின் துணை அமைச்சர் (சட்டம், MA63 மற்றும் மாநில-மத்திய உறவுகள்) ஷரீபா ஹசிதா சயீத் அமன் கசாலி, உதவியைத் திறம்பட வழங்குவதில், இலக்கு மானியங்களைத் தீர்மானிக்கப் பொருளாதார மற்றும் நிதி நிலைகள்பற்றிய தகவல்கள் முக்கியம் என்றார்.

“ஆனால் இலக்கு பெறுபவர்களின் தகுதியை நிர்ணயிப்பதில் அவசியமில்லாத அவர்களின் தனிப்பட்ட மற்றும்  சுயவிவரங்களை வெளிப்படுத்தும் அளவிற்கு அல்லது அம்பலப்படுத்தும் அளவிற்கு அல்ல,” என்று ஷரீஃபா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சரவாக் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவைத் தொடர்ந்து, மாநிலத்தில் படுவின் கீழ் பதிவுச் செயல்முறையை நிறுத்துவதற்கான மேம்பாடுகள் நிலுவையில் உள்ளதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்தது.

“மலேசியர்களுக்கு உதவுவதற்கான அரசாங்க வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான மத்திய அரசாங்கத்தின் உன்னத நோக்கத்தைச் சரவாக் அரசாங்கம் கொள்கையளவில் ஆதரிக்கிறது, ஆனால் அதைச் செயல்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தற்காலத்தில் தரவு மீறல்கள், கசிவுகள்  தொடர்பான வழக்குகள் பரவலாக இருப்பதால் சரவாக் அரசாங்கமும் பொதுமக்களும் வெளிப்படுத்தும் கவலைகள் செல்லுபடியாகும், அதே நேரத்தில் அனைத்து மலேசியர்களின் தனிப்பட்ட தரவையும் ஒரு மைய தரவுத்தளத்தில் ஒருங்கிணைக்க மிக உயர்ந்த பாதுகாப்பு தேவை என்று அவர் கூறினார்.

“சரவாக்கியர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதால், மத்திய அரசின் முன்முயற்சியை சரவாக் அரசாங்கம் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்பதற்காக, அதன் பாதுகாப்புச் செயலாக்கம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான விஷயத்தில் பொருளாதார அமைச்சகத்தின் விளக்கங்கள் பொருத்தமானவை,” என்று ஷரிஃபா மேலும் கூறினார்.

 ஷரீபா ஹசிதா சயீத் அமான் கசாலி

சரவாக் அரசாங்கத்தால் எழுப்பப்பட்ட கவலைகளுக்குப் பதிலளித்த பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி, இந்த வாரம் சரவாக் அரசாங்கத்துடன் ஒரு சந்திப்பை நடத்தி படுவுக்கான பதிவுகுறித்து ஆலோசிப்பதாகக் கூறினார்.

Padu வைப் பதிவுசெய்தல் மற்றும் புதுப்பித்தல் செயல்முறையை இடைநிறுத்துவதற்கான மாநில அரசின் உத்தரவைப் பின்பற்றி இவ்வாறு அவர் கூறினார்.

“இதுவரை, பதிவை நிறுத்துவதற்கான உத்தரவு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்”.

“நாங்கள் சரவாக் அரசாங்கத்தைத் தொடர்பு கொண்டுள்ளோம், அடுத்த வாரம் (இந்த வாரம்), பொருளாதார அமைச்சகம் அவர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க அமரும்,” என்று அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஷா ஆலமில் நடந்த படு டவுன் ஹால் அமர்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.