முன்மொழியப்பட்ட EPF சுகாதார காப்பீட்டுத் திட்டம் தன்னார்வமாக இருக்கும் – சுல்கேப்ளி

ஊழியர் வருங்கால வைப்பு நிதியத்தின் (EPF) கணக்கு 2 மூலம் நிதியளிக்கப்படும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட சுகாதார காப்பீட்டுத் திட்டம், கட்டாயமாக இல்லாமல் தன்னார்வமாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் சுல்கேப்லி அகமது தெரிவித்தார்.

EPF பங்களிப்பாளர்களுக்குப் பரந்த காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று அவர் கூறினார், தற்போது, ​​32 சதவீத சுகாதாரச் செலவுகள் காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாத நோயாளிகளால் தங்கள் சொந்த செலவில் செலுத்தப்படுகின்றன.

“இந்த அணுகுமுறையின் மூலம், மக்கள்மீதான நிதிச் சுமையை அதிகரிக்காமல், விரைவான, உயர்தர தனியார் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை விரிவுபடுத்த அரசாங்கம் நம்புகிறது,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

பெரும்பாலான குடிமக்களுக்குக் காப்பீட்டு அணுகலை முன்னுரிமைப்படுத்தும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து இந்தத் திட்டம் உத்வேகத்தைப் பெறுகிறது என்று சுல்கேப்ளி மேலும் கூறினார்.

“EPF கணக்கு இரண்டில் சுமார் ஒரு சதவீதம் மட்டுமே காப்பீட்டுக்கு பணம் செலுத்தப் பயன்படுகிறது. இதுவே சிறந்த வழி,” என்று அவர் கூறினார்.

மலேசியர்கள் தங்கள் EPF கணக்கு 2 ஐ மாதாந்திர சுகாதார காப்பீட்டு பிரீமியங்களை செலுத்த அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நேற்று சுல்கேப்ளி தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.

இது செயல்படுத்தப்பட்டால், 16 மில்லியன் EPF உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகளைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனை பராமரிப்பைப் பெற முடியும்.