இல்லாத கிரிப்டோகரன்சி முதலீட்டை இயக்கும் ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்ட பின்னர் ஓர் ஓய்வு பெற்றவர் ரிம 525,000 இழந்தார்.
மே 23 அன்று, 71 வயதான அந்த நபர் முகநூலில் ஒரு கிரிப்டோகரன்சி முதலீட்டு விளம்பரத்தைக் கண்டதாகக் கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்தார்.
சந்தேக நபருடன் ஆன்லைனில் தொடர்பு கொண்ட பாதிக்கப்பட்டவர், 500,000 அமெரிக்க டாலர்கள் திருப்பித் தருவதாக உறுதியளிக்கப்பட்ட பின்னர் ரிம 525,000 முதலீடு செய்ததாக அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் தனது ஓய்வூதிய சேமிப்பைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 20 முதல் 27 வரை சந்தேக நபரின் கணக்கில் ஏழு பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்”.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

























