தைவானிய செல்வாக்கு மிக்க ஹ்சீஹ் யூ-ஹ்சினின் மரணம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ராப்பர் நேம்வீ தடுப்புக்காவல் செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான அந்த நபரை இன்று முதல் நவம்பர் 10 ஆம் தேதிவரை காவலில் வைக்கக் காவல்துறையினர் உத்தரவு பெற்றதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சசாலி ஆடம் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கலைஞரான வீ மெங் சீ, இன்று அதிகாலை காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு இது நடந்தது.
முன்னதாக, நேம்வீ ஒரு காவல் நிலையத்தின் முன் எடுக்கப்பட்ட செல்ஃபியைக் காட்டும் ஒரு இன்ஸ்டாகிராம் கதையை வெளியிட்டார், இது அவர் வந்துவிட்டதாகக் குறிக்கிறது.
மேலும், காவல்துறையினருடன் ஒத்துழைப்பதாக ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார்.
“நான் ஜொகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு இப்போதுதான் வந்தேன். முன்னதாக, காவல்துறையினரிடம் புகார் அளித்து, காவல் நிலையத்தில் ஆஜராக ஒரு நேரத்தை ஏற்பாடு செய்திருந்தேன்”.
“நான் இப்போது வந்துவிட்டேன், பொதுமக்களுக்கும் இறந்தவரின் குடும்பத்தினருக்கும் பதில்களை வழங்கக் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்.”
“நான் ஓடிப்போகமாட்டேன். கடந்த காலத்தில், எனக்கு ஏழு முறை வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன, ஒவ்வொரு முறையும் நான் தானாக முன்வந்து காவல்துறையிடம் சென்றேன். நான் ஒருபோதும் ஓடியதில்லை,” என்று அவர் பதிவில் கூறினார்.
விசாரணைகளுக்கு உதவுதல்
சைனா பிரஸ் படி, வீ அதிகாலை 1.10 மணியளவில் டாங் வாங்கி காவல் தலைமையகத்திற்கு காரில் வந்தார். வெளியே செல்ஃபி வீடியோ எடுத்தபிறகு, புலனாய்வாளர்களைச் சந்திக்க நிலையத்திற்குள் நுழைந்தார்.
நேற்றிரவு, சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொள்ள முடியாததால், அவரைப் போலீசார் தேடி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கேஎல் காவல்துறைத் தலைவர் பாடில் மார்சஸ்
பாதிக்கப்பட்டவருடன் இருந்த கடைசி நபர் நமேவீ என்று நம்பப்படுவதால், விசாரணையில் உதவுவதற்காக அவரைப் போலீசார் தேடி வருவதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாடில் மார்சஸ் தெரிவித்தார்.
“கண்டுபிடிப்புகளைப் பொறுத்து, அவரைச் சந்தேக நபராகக் கருத வேண்டுமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்,” என்று அவர் நேற்று கூறினார்.
முன்னதாக, ஹ்சீயின் மரணம்குறித்த விசாரணை, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் கொலை விசாரணையாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாடில் அறிவித்தார்.
ஐரிஸ் என்றும் அழைக்கப்படும் ஹ்சீஹ், நான்கு நாள் பயணமாக அக்டோபர் 20 ஆம் தேதி மலேசியா வந்தடைந்தார், ஆனால் அக்டோபர் 22 ஆம் தேதி இறந்து கிடந்தார் என்று அவர் கூறினார்.
ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க கூட்டம்
ஊடக அறிக்கைகளின்படி, வீ, ஹ்சீஹை சந்தித்து ஒரு ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் அறிக்கை ஒன்று கூட்டத்திற்கான நாளை அக்டோபர் 22 அன்று அறிவித்தது.
தைவானிய பிரபலம் மிக்க ஹ்சீ யூ-ஹ்சின்
அக்டோபர் 24 அன்று, வீ மீது போதைப்பொருள் தொடர்பான இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டன.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39A(1) இன் கீழ் போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக முதல் குற்றச்சாட்டில், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், மூன்று முதல் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்படும்.
அதே சட்டத்தின் பிரிவு 15(1)(a) இன் கீழ் போதைப்பொருள் நுகர்வுக்கான இரண்டாவது குற்றச்சாட்டு, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரிம 5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

























