தகுதியுள்ள மலேசியர்களின் மைகாடில், ஜனவரி 9 ஆம் தேதி முதல் படிப்படியாக ரிம 200 வரையிலான மாதாந்திர ரஹ்மா தேவை உதவி (சாரா) வரவு வைக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இதற்கிடையில், ரஹ்மா பண உதவியின் (STR) முதல் கட்டம், ரிம 500 வரையிலான தொகை ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் என்று அவர் கூறினார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், கடந்த ஆண்டு நிதி உதவியைப் பெற்றவர்களில் நான்கு சதவீதம் பேர் பயன்படுத்தவில்லை என்றும், இதன் விளைவாக ரிம 150 மில்லியன் உபரி கிடைத்ததாகவும் கூறினார்.
“நான் உறுதியளித்தபடி, ரிம 150 மில்லியன் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படாது,” என்று அவர் இன்று காலைப் பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.
அதற்குப் பதிலாக, தங்குமிடங்களில் வசிக்கும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவைகளுள்ள மாணவர்கள் மற்றும் ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்கு இந்தப் பணம் விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இது சம்பந்தப்பட்ட அமைச்சகங்களால் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் விடுத்த கடைசி நேரக் கோரிக்கையை ஏற்று, அந்தத் தொகையில் 15 மில்லியன் ரிங்கிட் உணவு வங்கிகள் (food banks) மற்றும் மாணவர் சமையல் கூடங்களுக்கு (student kitchens) ஒதுக்கப்படும் என்று அன்வார் கூறினார்.
மேலும் இடங்கள்
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் ரிம 100 சாரா உதவி பிப்ரவரி 9 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று அவர் கூறினார், இது வரவிருக்கும் ரமலான் மற்றும் சீன புத்தாண்டு ஏற்பாடுகளுக்கு உதவும் என்றும் கூறினார்.
பண உதவியுடன் கொள்முதல் செய்ய அனுமதிக்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தையும் அன்வார் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தை 50,000 கடைகளாக விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக அவர் கூறினார் – இது கடந்த ஆண்டைவிட 10,000 வளாகங்கள் அதிகமாகும்.
கிராமப்புறங்களில் உள்ள கடைகள் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாததால், பண உதவியை மீட்டெடுக்க முடியாது என்ற புகார்கள் இதற்குக் காரணம் என்று அவர் விளக்கினார்.
கல்வித் துறை
இந்த ஆண்டு சீன மொழிப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை ரிம 50 மில்லியனிலிருந்து ரிம 80 மில்லியனாக அதிகரிப்பதாகவும் பிரதமர் அறிவித்தார்.
தமிழ் மொழிப் பள்ளிகளுக்கு ரிம 50 மில்லியன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆரம்ப பள்ளி உதவித் திட்டத்தைப் பொறுத்தவரை, இந்த வாரத்திற்குள் அல்லது அடுத்த வாரத்திற்குள் தொடக்க அல்லது இடைநிலை அரசுப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர்கள் ரிம 150 பெறுவார்கள் என்று அன்வார் கூறினார்.
“முன்பு படிவம் 5 ஆக உயர்த்தினோம், இப்போது படிவம் 6 ஆக உயர்த்தியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அரசாங்கம் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளிகளுக்குச் சென்று, தங்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையிலும் ஆசிரியர்களைக் கேட்க வேண்டும்.
“அவர்கள் பிரதிநிதிகளைப் பயன்படுத்த முடியாது… நிபந்தனை என்னவென்றால், அவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும், ஏனெனில் (இந்தத் திட்டத்திற்கான) செலவு ஆண்டுக்கு ரிம 800 மில்லியன் ஆகும்,” என்று அவர் கூறினார்

























