மத்திய கிழக்கு சண்டையால் எண்ணெய் விலைகள் விண்ணை தொட்டன

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் சண்டை மோதல்கள் காரணமாக எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்திற்கான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்தார்.

மலேசியர்களுக்கான பூடி95 எரிபொருள் மானியத்தை புத்ராஜெயா பராமரிக்கும் என்று உறுதியளித்த அன்வார், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டியவை தவிர, அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரசு துறைகளுக்கான வெளிநாட்டுப் பயணம் குறைவாக இருக்கும் என்று கூறினார்.

“தலைமைத்துவம் இன்னும் நேர்மறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாக, அனைத்து அரசு நிறுவனங்கள், அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (GLCs) மற்றும் அரசுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (GLICs) Aidilfitri திறந்த இல்ல கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யாது என்று அமைச்சரவையுடன் நான் முன்பே முடிவு செய்துள்ளேன்.