மருத்துவமனை காப்பகத்தில் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

பினாங்கு காவல்துறை தலைவர் அஜீஸி இஸ்மாயில், விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

“வழக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் (DPP) பரிந்துரைப்பதற்கு முன், பல முக்கிய அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் அஜிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.”

கடந்த வாரம் செபரங் ஜெயா மருத்துவமனையின் 24 மணி நேரக் குழந்தைகள் காப்பகத்தில் நீரில் மூழ்கியதால் குழந்தை உயிரிழந்தது, முதற்கட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகளின்படி தெரியவந்துள்ளது என பினாங்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பதற்கு முன்பு பல முக்கிய அம்சங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் மாநில காவல்துறைத் தலைவர் அஜிசி இஸ்மாயில் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெய்ல் ஹாரித் ஷஃபாயீஸ் என அடையாளம் காணப்பட்ட நான்கு மாத ஆண் குழந்தை, மார்ச் 9 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மழலையர் பள்ளியில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டது.

அதிகாலை சுமார் 4 மணியளவில், அப்போது இரவுப் பணியில் இருந்த செவிலியரான அவரது தாய், 30 வயது உம்மு ஹபீபா வஹாபிடம், தன் மகனின் உடல் நீல நிறமாக மாறியதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவக் குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் ஹெய்லுக்கு உயிர் மீட்சி அளிக்க முயன்றனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

“குழந்தை காப்பகத்தில் பணிபுரிந்த இரண்டு பெண்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர், மேலும் கொலைக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக மறுநாளே அவர்கள் தடுப்புக்காவலில் (Remand) வைக்கப்பட்டனர்.”

பின்னர் சமூக நலத்துறை நடத்திய விசாரணையில், 22 வயதுடைய அந்த இரண்டு பெண்களும் கட்டாயக் குழந்தை பராமரிப்புப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கான காவல் மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.