சரவாக் போதைப்பொருள் கும்பலை முடக்கிய காவல்துறையினர், ‘விநியோகஸ்தர்’ எனக் கூறப்படும் நபரை கைது செய்தனர்

“அந்த போதைப்பொருட்களின் கள்ளச் சந்தை மதிப்பு ரிம 2.75 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.”

சரவாக் காவல்துறைத் தலைவர் சைனல் அப்துல்லா கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த அளவு சுமார் 2,75,000 பயனாளிகளுக்கு போதுமானதாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

சாரவாக் மாநில காவல்துறை மிரி நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை முடக்கியுள்ளது. உள்ளூர் நபர் ஒருவரைக் கைது செய்த காவல்துறையினர், சுமார் 27.5 லட்சம் மலேசிய ரிங்கிட் ரிம 2.75 மில்லியன் மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் 55 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

மிரி பைபாஸில் உள்ள ஜாலான் சகாயாவில் உள்ள ஒரு வீட்டை ஜூலை 8 அன்று காவல்துறையினர் சோதனையிட்டதாகவும், அங்கு 27 வயதுடைய உள்ளூர் நபரைக் கைது செய்து, 30 கிலோ மெத்தம்பேட்டமைனைப் பறிமுதல் செய்ததாகவும் சரவாக் காவல்துறைத் தலைவர் ஜைனல் அப்துல்லா தெரிவித்தார்.

இந்தக் கைதைத் தொடர்ந்து, மிரி, ஜாலான் அகாசியாவில் உள்ள மற்றொரு வீட்டில் காவல்துறையினர் நடத்திய இரண்டாவது சோதனையில், மேலும் 25 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் புரோட்டான் ஈஸ்வாரா (Proton Iswara) காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

‘கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருள் சுமார் 275,000 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம்,’ என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதம் முதல் இந்த சந்தேக நபர் ஒரு கடத்தல் கும்பலின் முகவராக (runner) செயல்பட்டு வந்துள்ளதாகவும், டெலிகிராம் (Telegram) செயலி மூலம் அறிவுறுத்தல்களைப் பெற்று, நேரடித் தொடர்பில்லாத (contactless) விநியோக முறையைப் பயன்படுத்தி போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஜைனல் கூறினார்.

ஒவ்வொரு பணிக்கும் சந்தேக நபர் ரிம7,000 பெற்றதோடு, ஒவ்வொரு போதைப்பொருள் விநியோகத்தை வெற்றிகரமாக முடித்த பிறகும் கூடுதலாக ரிம 15,000 தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபரின் உடல் பரிசோதனையில் அவர் மெத்தம்பேட்டமைன் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அவர் ஆரம்பத்தில் ஜூலை 9 முதல் 15 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார், பின்னர் காவற்காலம் ஜூலை 20 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த வழக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.