முன்னாள் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டிஏபி-யில் இணைகிறார்

என்யூஜே என அழைக்கப்படும் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முகமட் ஹட்டா வாஹாரி, டிஏபி-யில் சேர்ந்துள்ளார்.

அண்மைய காலமாக பல மலாய்க்காரர்கள் அந்தக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

ஹட்டாவை வரவேற்றுப் பேசிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அந்த முன்னாள் என்யூஜே தலைவர் பத்திரிக்கை சுதந்திரத்துக்கான தமது போராட்டத்தை தொடருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

“அவர் கட்சிக்கும் பங்காற்ற முடியும். அத்துடன் பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் பேச்சுரிமைக்கும் -போராட முடியும்,” என அவர் சொன்னார்.