புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் பிரதமர்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

நேற்று பின்னேரம் நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் அந்த டத்தோ டி கூறிக் கொண்டுள்ளது பற்றி அவரிடம் வினவப்பட்டது.

அன்வார் எனக் கூறப்படும் ஒருவர் சம்பந்தப்பட்ட செக்ஸ் வீடியோ ஒன்றை கடந்த ஆண்டு அம்பலப்படுத்திய டத்தோ டி மூவரிடம் அது பற்றிக் கேட்க வேண்டும் என நஜிப் சொன்னார்.

“எனக்குத் தெரியாது. நீங்கள் அந்த மூவரிடம் கேட்க வேண்டும். என்னிடம் கேட்காதீர்கள்,” என்றார் அவர்.

அந்த வீடியோவைத் தாம் பார்க்கவில்லை என்றும் நஜிப் தெரிவித்தார்.

” எனக்குத் தெரியாது. அது குறித்து எனக்கு எந்த விவரமும் தெரியாது… அதுவும் இரவு நேரத்தில் வீடியோக்கள் பற்றிப் பேசுவது,” என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

துணைப் பிரதமர் முஹைடின் யாசின் உட்பட மற்ற அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்களும் நஜிப் சொல்வதை ஒப்புக் கொண்டனர்.

புதிய வீடியோ சம்பந்தப்பட்ட விஷயத்தை நேற்று டத்தோ டி மூவரில் ஒருவரான ஷுய்ப் லாஸிம் நேற்று வெளியிட்டார். ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டதை விட “மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக” புதிய வீடியோ இருக்கும் என்றும் அவர் கூறிக் கொண்டார்.

அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா நேற்று ஷுய்ப்-பை மேற்கோள் காட்டி அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.