கோபாலகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டது செல்லாது-உயர் நீதிமன்றம்

ஜார்ஜ்டவுன் உயர்நீதி மன்றம், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் பாடாங் செராய்  சுயேச்சை எம்பி, என்.கோபாலகிருஷ்ணன் விடுவிக்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தள்ளுபடி செய்து எதிர்வாதம் செய்யுமாறு அவருக்கு உத்தரவிட்டது.

2009-இல், ஒரு போலீஸ் அதிகாரி அவரது கடமையைச் செய்வதைத் தடுத்ததாக கோபாலகிருஷ்ணன்மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

மாஜிஸ்ட்ரேட் அவரை எதிர்வாதம் செய்ய அழைக்காமலேயே  விடுவித்தார்.