பிஏசி நாளை என்எப்சி-யை விசாரிக்கும்

பல மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள என்எப்சி  என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு நாளை என்எப்சி அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளது.

“நாங்கள் சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம். நீதிமன்ற விசாரணையில் உள்ள விஷயங்களும் உள்ளன. என்றாலும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள விஷயங்களை நாங்கள் தொட்டிருப்பது இது முதன் முறையல்ல,” என பொதுக் கணக்குக் குழுத் தலைவர் அஸ்மி காலித் கூறினார்.

அந்தக் குழுவின் கூட்டம் இன்று நான்கு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது. அப்போது நிதி அமைச்சு, விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சு ஆகியவற்றின் பேராளர்கள் வழங்கிய அறிக்கைகளை அந்தக் குழு செவிமடுத்தது.

TAGS: