‘WWW1 அனுமதி எண் பட்டை’ மீது நிஜார் கூறிய கருத்துக்களை போலீஸ் புலனாய்வு செய்கிறது

ஜோகூர் சுல்தான்  ‘WWW1 அனுமதி எண் பட்டையை வாங்கியது மீது தமது டிவிட்டர் மூலம் முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தெரிவித்த கருத்துக்களை தாங்கள் புலனாய்வு செய்வதை ஜோகூர் போலீசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் அந்தப் புலனாய்வுக்காக பணிக் குழு ஒன்றை அமைத்திருப்பவதாகவும் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அந்த விவகாரம் விசாரிக்கப்படுவதாகவும் மாநில போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் கூறினார்