அடுத்த பொதுத் தேர்தலில் சாதாரணப் பெரும்பான்மையுடன் புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொண்டுள்ளார். அந்த அதிகார மாற்றம் அமைதியானதாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உட்பட பிஎன் தலைவர்கள், தாங்கள் தோல்வி கண்டால் அதிகாரத்தை பிடிவாதமாக பிடித்துக் கொண்டிருப்பதின் மூலம் தங்களது எதிர்காலத்தை பணயம் வைக்க மாட்டார்கள் என அவர் சொன்னார்.
அன்வாருடைய அறிக்கை அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி கண்டால் அவை குழப்பத்தை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து இன்னும் முடிவு செய்யாமல் மதில் மேல் பூனையாக இருக்கும் வாக்காளர்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் அமைச்சர் ராயிஸ் யாத்திமும் கூட அதே எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
“மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும் என நான் நினைக்கிறேன். அமைதி நிலைக்கும் என நான் நம்புகிறேன். காரணம் அவ்வாறு இல்லாவிட்டால் பெரும் ஆபத்து காத்திருப்பது அவர்களுக்குத் தெரியும். நீங்கள் கலவரத்தை மூட்டினால் உங்கள் உயிரும் பணயம் வைக்கப்படுகிறது.”
“அதிகார மாற்றம் ஏற்பட்ட எந்த நாட்டிலும் அது மக்களிடமிருந்து திருடப்படவில்லை. தலைவர்கள் தப்பிக்க முடியாது,” என நேற்றிரவு மலேசிய அந்நியப் பத்திரிக்கையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அன்வார் கூறினார்.
அதற்கு முன்னதாக பிஎன் தேர்தலில் தோல்வி கண்டால் கலவரம் மூளுமா என அவரிடம் வினவப்பட்டது.
“அவரை (நஜிப்) மகாதீர் திசை திருப்பா விட்டால், தவிர,” என அன்வார் கிண்டலாகக் கூறினார்.
பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் பிஎன் தலைவர்களை ‘பழி வாங்கும்’ நடவடிக்கை தொடங்கப்பட மாட்டாது என்றும் அன்வார் வாக்குறுதி அளித்தார்.
“நாங்கள் ஆட்சி புரிய விரும்புகிறோம். எதிர்த்தரப்பு மீது மறைவுத் தாக்குதல் நடத்தப் போவதில்லை. கடந்த காலத்தையே நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் ஒரு போதும் வெற்றி அடைய முடியாது.”
‘எங்களுக்குக் குறைந்தது 10 இடங்கள் பெரும்பான்மையாவது கொடுங்கள்’
அடுத்த சில மாதங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த தேர்தலில் பக்காத்தானுடைய வாய்ப்புக்கள் பற்றி முன்னாள் துணைப் பிரதமர் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.
“புத்ராஜெயாவில் சாதாரணப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு போதுமான அளவுக்கு நாங