எம்ஏஎஸ்-தாஜுடின் ரம்லி வழக்குகளுக்குத் தீர்வு

மலேசிய விமான நிறுவனம்(எம்ஏஎஸ்) அதன் முன்னாள் தலைவர் தாஜுடின் ரம்லிமீது தொடுத்திருந்த மூன்று வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

தீர்வின் ஒரு பகுதியாக எம்ஏஎஸ், லங்காவியில் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் கட்டப்பட்டிருக்கும் நிலத்தைப் பெறும் எனத் தெரிகிறது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்,எம்ஏஎஸ்ஸும் தாஜுடினும் ஒரு தரப்பு மற்ற தரப்பின்மீது தொடுத்திருந்த வழக்கையும் எதிர்வழக்கையும் மீட்டுக்கொள்ள அனுமதித்துள்ளதாக அறியப்படுகிறது.

நீதிபதி ரொசிலா யோப் முன்னிலையில் இத்தீர்வு காணப்பட்டிருக்கிறது.

தீர்வு காணப்பட்டது பற்றி மலேசிய பங்குச் சந்தைக்கு இன்று தெரிவிக்கப்படும்.