நோ ஒமார்: இங் சுவி லிம்மின் திருகுதாளங்களை அம்பலப்படுத்துவோம்

சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர் நோ ஒமார்,விரைவில் செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம்மின் திருகுதாளங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும் என்று எச்சரித்துள்ளார்.

செய்தியாளர் கூட்டமொன்றில் நோ-விடம்  அம்னோ தஞ்சோங் காராங் டிவிசன், சந்தைவிலையைவிட குறைந்த விலைக்கு நிலம் வாங்கியதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி வினவியபோது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

குற்றச்சாட்டு பற்றி விளக்கம் அளிக்காமல், “அந்த டிஏபி சட்டமன்ற உறுப்பினரிடம்,செகிஞ்சானில் அவர் சம்பந்தப்பட்ட கண்டோமினிய விவகாரத்தைச் செவிமடுக்க தயாராக இருக்கச் சொல்லுங்கள்”, என்றார்.

“காத்திருங்கள்.அதைப் பற்றி அவரிடம் கேட்போம்”, என்று தஞ்சோங் காராங் எம்பியுமான நோ கூறினார்.