சரவாக் பிகேஆர் உதவித் தலைவர் ஹெலிகோப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்

சரவாக் மாநில பிகேஆர் உதவித் தலைவர் பீட்டர் அட்டு மாயாவ் ஒரு ஹெலிகோப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்.

அவரின் மரணத்தை பிகேஆர் புக்கிட் லான்ஜான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் ஒரு டிவிட்டர் செய்தியில் உறுதிப்படுத்தினார்.

விபத்தில் கொல்லப்பட்ட நால்வரில் பீட்டரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதில் இரண்டாவதாகும்.

அமைதியான கொள்கைவாதி

பீட்டரின் மரணம் கட்சிக்கு ஒரு பேரதிர்ச்சியாகும் என்று சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியன் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறினார்.

“பீட்டர் அமைதியானவர், ஆனால் கொள்கைப் பிடிப்புள்ளவர். அவர் நீதி மற்றும் மக்களுக்கு நியாயம் ஆகியவற்றுக்கான போராட்டதில் நம்பிக்கை கொண்டிருந்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயார்படுத்திகொள்ள அவர் மாம்போங் நாடாளுமன்ற தொகுதியில் ஆரவாரமின்றி பரப்புரையில் ஈடுபட்ட்டிருந்தார்”, என்று பாரு பியன் கூறினார்.