நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 29வரை நீட்டிப்பு

நவம்பர் 27-இல் முடிவடைய வேண்டிய 12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணையின் மூன்றாவது கூட்டம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சில சட்டவரைவுகளையும் அரசாங்க விவகாரங்களையும் இறுதி செய்வதற்கு வசதியாக அக்கூட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிலை ஆணை 11(2)-இன்கீழ் மக்களவைக் கூட்டம் நீட்டிக்கப்படுவதாக அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அறிவித்தார்.

நடப்புக் கூட்டம் எல்லா அமைச்சுகளுக்குமான 2013 விநியோக சட்டமுன்வரைவு பற்றி குழு நிலைகளில் விவாதித்து வருகிறது.

இதுவே 13வது பொதுத் தேர்தலுக்குமுன் நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டமாக இருக்கும் என்று ஊகம் கூறப்பட்டுள்ளது.