கம்போங் தண்டுவோ ‘பாதுகாப்பான பகுதியில்’ சிஐடி, தடயவியல் குழுக்கள் தாக்கப்பட்டன

hisham‘மிக அண்மையில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஒரு பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட சூழ்நிலையில் எங்களுடைய சிஐடி என்ற குற்றப்புலனாய்வுத் துறை, (சிஐடி) தடயவியல் துறை குழுக்கள் அங்கு சென்றன. ஆனால் அவை அங்கு தாக்குதலுக்கு இலக்காகின.”

துடைத்தொழிப்பு நடவடிக்கைக்கான ஆதாரங்களை திரட்டுவதற்காக கம்போங் தண்டுவோ-க்குள் அனுப்பப்பட்ட தடயவியல் அதிகாரி ஒருவர் மீது ஊடுருவல்காரர்களில் எஞ்சியுள்ளவர்கள் தாக்கியதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று கூறினார்.

“நேற்று நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் தப்பித்த இரண்டு அல்லது மூன்று ஊடுருவல்காரர்கள் இருந்தனர்….”

“மிக அண்மையில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஒரு பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட சூழ்நிலையில் எங்கள் போலீஸ் குற்றப் புலனாய்வுத் துறை, தடயவியல் குழுக்கள் அங்கு சென்றன. ஆனால் தாக்கப்பட்டன,” என்று ஹிஷாமுடின் தெரிவித்தார்.