காலித் சிலாங்கூர் மந்திரி புசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்

khalidஅப்துல் காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசாராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று காலை மணி  10.10 வாக்கில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

கிள்ளானில் உள்ள இஸ்தானா அலம் ஷா-வில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் ஷா முன்னிலையில் அவர் அந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.

அந்த நிகழ்வில் அரச குடும்பத்தினரும் மாநில அரசாங்கத் துறைகளின் தலைவர்களும், மாநில அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டதாக காலித்-தின் அரசியல்  செயலாளர் பாக்கே ஹுசின் கூறினார்.

மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஏன் அந்த நிகழ்வில் பங்கு கொள்ளவில்லை என வினவப்பட்ட  போது அழைக்கப்படும் பிரமுகர்கள் பட்டியலை அரண்மனை தயாரித்ததாக பாக்கே விளக்கினார்.

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, காலித் நியமனம் மீது சர்ச்சையை கிளப்பியிருந்தார்.