மகாதீர்: சிறந்த மலேசியாவுக்கு சுதந்திரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்

mahathirசிறந்த மலேசியாவை நிர்மாணிக்க வேண்டுமானால் மலேசியர்கள் குறைவான  சுதந்திரங்களுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என டாக்டர் மகாதீர் முகமட்  கூறுகிறார்.

“நாம் நமது சுதந்திரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நம்மைக் கட்டுப்படுத்திக்  கொள்ள வேண்டும். சுய கட்டுப்பாடு அவசியமாகும்,” என அவர் இன்று  கோலாலம்பூரில் சொன்னார்.

அதிகமான சுதந்திரம் என்பது அதனை பொறுப்பற்ற சக்திகள் தவறாகப்
பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகமான வாய்ப்புக்கள் எனப் பொருள்படும் என  மகாதீர் விளக்கினார். அதனால் நிலைத்தன்மையும் சீர்குலையும்.

“13வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் மலேசிய அரசியலுக்கு நல்ல காலம்’ என்னும்  தலைப்பிலான கருத்தரங்கில் பேசினார்.

 

TAGS: